அதிகாலையில் வீட்டிலிருந்து வெளியே வந்த இலங்கை தமிழ்ப்பெண்ணை கடித்த விஷப்பாம்பு! சிறிது நேரத்தில் உயிரிழந்த சோகம்
தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த பெண்ணொருவர் பாம்பு கடித்ததில் உயிரிழந்துள்ளார்.
சேலம், சித்தர்கோவில், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் கலா (58). இவர் நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணிக்கு வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிக்க அருகே உள்ள பொது கழிப்பிடத்துக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த விஷப்பாம்பு கலாவை கடித்தது.
இதனால் வலியில் துடித்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் கலா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. விஷப்பாம்பு கடித்து இலங்கை தமிழ்ப்பெண் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.