தனது சொந்த வீட்டை தீயிட்டு கொளுத்திவிட்டு ரிலாக்சாக உட்கார்ந்து ரசித்த பெண்! காரணம் என்ன? அதிர்ச்சி வீடியோ
அமெரிக்காவில் வீட்டை தீவைத்து கொளுத்திவிட்டு ரிலாக்சாக புல்வெளியில் உட்கார்ந்திருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீசில் கவுண்டியை சேர்ந்தவர் கெயில் மெட்வேலி (47). இவர் தான் வசித்த வீட்டை தீயிட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் வீட்டுக்கு வெளியில் இருக்கும் புல்வெளியில் வந்து உட்கார்ந்த மெட்வேலி ரிலாக்சாக வீடு தீப்பற்றி எரிவதை ரசித்து பார்த்துள்ளார்.
இதையெல்லாம் அக்கம்பக்கத்தினர் வீடியோ எடுத்த நிலையில் அது தற்போது வைரலாகியுள்ளது. இதனிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி மெட்வேலி வசித்த வீட்டில் அவருடன் சேர்த்து மொத்தமாக 4 பேர் வசித்தனர். வீடு தீப்பிடிக்கும் போது இருவர் வெளியில் சென்ற நிலையில் மெட்வேலியும் இன்னொரு நபரும் இருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்தே அந்த நபரை வீட்டுக்குள் விட்டு வெளியில் வந்த மெட்வேலி வீட்டை தீயிட்டு கொளுத்தியுள்ளதாக தெரிகிறது.
பின்னர் வீட்டுக்குள் இருந்த நபர் தன்னை காப்பாற்றுமாறு அலறிய நிலையில் அருகில் இருந்தவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைந்துள்ளனர். இந்த நிலையில் பொலிசார் மெட்வேலியை கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலை முயற்சி வழக்கு, ஒருவரை தாக்கியது, பொறுப்பற்ற வகையில் ஆபத்தை விளைவிக்கும் செயலை செய்தது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது.