இடுப்பில் கை வைத்து துன்புறுத்தினான்! கொரோனா பாதித்த கணவரை மருத்துவமனையில் சேர்த்த மனைவிக்கு நேர்ந்த நிலை.. பகீர் வீடியோ
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனுக்கு சரியான சிகிச்சையளிக்காததோடு மருத்துவமனை ஊழியர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டனர் என மனைவி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் தான் இந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் நொய்டாவில் இருந்து ஹோலி பண்டிகையை கொண்டாட பீகாருக்கு நானும் கணவரும் வந்தோம்.
கடந்த மாதம் 11ஆம் திகதி என் கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் இரு முறை எடுத்த கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்தது.
नीतीश जी
— Pappu Yadav (@pappuyadavjapl) May 10, 2021
इस बहन को न्याय दो, इनके पति कोरोना से दम तोड़ रहे थे, वासना के वहशी दरिंदे इनके साथ छेड़खानी कर रहे थे।
भागलपुर के ग्लोकल हॉस्पिटल का कंपाउंडर ज्योति कुमार और राजेश्वर हॉस्पिटल के डॉ अखिलेश को गिरफ्तार कर स्पीडी ट्रायल चला फांसी दो। मैं तो इन दोनों को सजा दिलाऊंगा! pic.twitter.com/Y2xLsklU0G
ஆனால் வேறு மருத்துவர் கூறியபடி ஸ்கேன் எடுத்ததில் அவர் நுரையீரலில் பாதிப்பு இருப்பது தெரிந்தது.
அந்த சமயத்தில் என் தாய்க்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் இருவரையும் ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம், அங்கு அவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
அந்த மருத்துவமனையில் மிக மோசமான விடயங்கள் நடந்தது. என் கணவர் குடிக்க தண்ணீர் வேண்டும் என கெஞ்சியும் யாரும் கொடுக்கவில்லை, அந்த சமயத்தில் ஊழியர் ஒருவர் என் உடையை பிடித்து இழுத்து மோசமாக துன்புறுத்தினார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த என் தாயார் கத்தினார், பின்பு என் இடுப்பில் அவன் கை வைத்தான். ஆனால் இந்த கொடுமைகளை பற்றி நான் வெளியில் சொல்லவில்லை,
ஏனென்றால் என் கணவர் மற்றும் தாயாரை எதாவது செய்துவிடுவார்கள் என பயந்தேன். இதன்பிறகு ஆக்சிஜன் கொடுக்காமல் அலைகழித்தனர்.
மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜனை அதிக விலைக்கு வெளியில் விற்கிறார்கள். அதன்படி தலா 50,000 ரூ என 2 ஆக்சிஜனை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
இதன்பின்னர் என் கணவர் உடல் நிலை மிக மோசமானதால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
அங்கிருந்து டெல்லிக்கு கொண்டு செல்லும் வழியில் என் கணவர் உயிரிழந்துவிட்டார். கொரோனா வைரஸால் அவர் இறக்கவில்லை, மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் இறந்தார்.
மருத்துவமனைகளை நம்பாமல், தங்களின் அன்புக்குரியவர்களை பத்திரமாக கவனித்துக் கொள்ளுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.