வங்காளதேசத்தை தனியாளாக நொறுக்கிய ஹர்ஷிதா: இலங்கை அணி அபார வெற்றி
Women sri lanka beat bangladesh by 4 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
துபாயில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், வங்காளதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.
மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டி
இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டி துபாயில் நடந்தது.

முதலில் துடுப்பாடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக சோபனா 34 ஓட்டங்களும், திலரா அக்தர் 26 ஓட்டங்களும் எடுத்தனர். சாமுடி பிரபோதா 3 விக்கெட்டுகளும், சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
ஹர்ஷிதா ஆட்டநாயகி
பின்னர் ஆடிய இலங்கை அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஹர்ஷிதா சமரவிக்ரமா (Harshitha Samarawickrama) அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 48 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினார்.
இதன்மூலம் இலங்கை அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்த ஹர்ஷிதா ஆட்டநாயகி விருது பெற்றார்.



| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |