ஜேர்மன் நாட்டின் தலைவரை வெட்கப்பட வைத்துள்ள பெண்கள்: மேற்கத்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி
உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து, பிரித்தானியா உட்பட பல நாடுகள் உக்ரைனுக்கு உதவ முன்வந்தன.
ஆனால், ஜேர்மனி மட்டும் உக்ரைனுக்கு உதவ தயக்கம் காட்டி வந்தது.
நேட்டோ நாடுகள் கொடுத்த அழுத்தம் மற்றும் உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பு காரணமாக ஒரு வழியாக ஆயுதங்களை அனுப்ப சம்மதம் தெரிவித்தது ஜேர்மனி.
அதன்படி, விமானத்தைத் தாக்கும் Gepards என்னும் போர் வாகனங்களை உக்ரைனுக்கு அனுப்ப முன்வந்துள்ளது ஜேர்மனி. பிரச்சினை என்னவென்றால், அந்த வாகனங்களிலுள்ள ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு குறைந்தது ஐந்து மாத பயிற்சி வேண்டுமாம்.
அத்துடன், அந்த வாகனங்களில் பயன்படுத்தப்படும் குண்டுகள் முதலான உதிரி பாகங்கள் சுவிட்சர்லாந்திலிருந்து வரவேண்டும், அவற்றை அனுப்புவதற்கு சுவிட்சர்லாந்து இன்னமும் சம்மதிக்கவில்லை.
ஆக, ஜேர்மனி ஆயுதங்களை அனுப்பியும் அதனால் பயன் இருப்பது போலத் தெரியவில்லை.
இப்படி ஜேர்மனியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட Olaf Scholz உக்ரைன் விவகாரத்தில் முடிவெடுக்கத் தயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து, எஸ்தோனியா மற்றும் லிதுவேனியா நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளன.
அந்நாடுகள் ஒன்றில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்புவது, அல்லது ரஷ்யாவின் எரிவாயுவைப் புறக்கணிப்பது என ஏதாவது ஒரு வகையில் தங்கள் எதிர்ப்பை ரஷ்யாவுக்கு வெளிப்படையாகக் காட்டியுள்ள நிலையில், ஜேர்மன் தலைவரான Scholz தயக்கம் காட்டி வந்ததால், ஜேர்மன் தலைவரை வெட்கப்படுத்தியுள்ள போர் வீராங்கனைகள் என மேற்கத்திய நாடுகளின் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
காரணம், மேற்குறிப்பிட்ட நாடுகள் எல்லாமே பெண்களைத் தலைவராகக் கொண்டவை!