மறைந்த கணவர் விட்டுச்சென்ற லொட்டரிச்சீட்டு: உணர்ச்சிப்பெருக்கில் ஆழ்ந்துள்ள மனைவி
கணவனை இழந்த பிரித்தானியப் பெண்ணொருவர், தன் வீட்டுக்கு முன் வரிசையாக லொட்டரி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் சீருடையில் நிற்பதைக் கண்டு, அவர்கள் லொட்டரிச்சீட்டு வாங்குமாறு தன்னை கேன்வாஸ் செய்ய வந்திருப்பதாக நினைத்துள்ளார்.
கணவர் விட்டுச் சென்ற பரிசு
இங்கிலாந்திலுள்ள Salfordஇல் வாழும் லெஸ்லி (Lesley McNally, 54), 2021ஆம் ஆண்டு தனது அன்புக் கணவரான கேரியை (Garry McNally, 60) மாரடைப்புக்கு பறிகொடுத்துவிட்டார்.
Image: People's postcode lottery
கணவரை இழந்து துயரத்தில் ஆழ்ந்திருந்த லெஸ்லியின் வீட்டுக்கு முன் லொட்டரி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் சீருடையில் அணிவகுத்து நின்றிருக்கிறார்கள்.
பிறகுதான் தெரிந்திருக்கிறது, லெஸ்லியின் கணவரான கேரி, மரணத்துக்கு முன், லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கிவைத்துள்ளார். அந்த லொட்டரிச்சீட்டுக்கு 166,666 பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது என்பது.
Image: People's postcode lottery
எங்களுக்கு பரிசு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி, அதே நேரத்தில் நானும் அவரும் நீண்டகாலமாக லொட்டரிச்சீட்டு வாங்கிவந்த நிலையில், இப்போது ஒரு பெரிய தொகை பரிசாகக் கிடைத்துள்ளது. ஆனால், அதைக் கொண்டாட கேரி இல்லையே என்னும் எண்ணம் கவலையை ஏற்படுத்துகிறது என்று கூறும் லெஸ்லி, கேரி திடீரென மரணமடைந்ததால் எங்களுக்கு பெரிதாக திட்டம் எதுவும் இல்லை, இனிதான் திட்டமிடவேண்டும் என்கிறார்.
Image: People's postcode lottery
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |