லொட்டரியில் பல கோடி பரிசு விழுந்தும் அதை பெற முடியாமல் தவிக்கும் பெண்! பேண்ட் உடையை நீரில் நனைத்ததால் விபரீதம்
அமெரிக்காவில் லொட்டரியில் பெரியளவில் பரிசு விழுந்தும் அந்த பணத்தை பெற முடியாமல் பெண்ணொருவர் தவித்து வருவது தெரியவந்துள்ளது.
கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் சூப்பர் லொட்டோ ப்ளஸ் என லொட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அந்த லொட்டரியின் முதல் பரிசு $26 மில்லியன் ஆகும்.
இந்நிலையில் அவருக்கு அந்த பரிசு கிடைத்த விவரம் தெரிய வரவே தாம் வாங்கிய லொட்டரி சீட்டை தேடி உள்ளார்.
அப்போது தான் தனது பேண்ட் உடையில் லொட்டரி சீட்டை வைத்தப்படியே அதை தண்ணீரில் நனைத்து துவைத்தது அவருக்கு நினைவுக்கு வந்தது.
இதை நேராக சென்று லொட்டரி நிறுவனத்திடமும் அவர் கூறினார். ஆனால் அந்த நிறுவனம் லொட்டரி சீட்டு இருந்தால் பரிசுத் தொகை கிடைக்கும் என்று கூறவே செய்வதறியாமல் அந்த பெண் திகைத்து உள்ளார்.
இதையடுத்து குறித்த கடையில் தான் லொட்டரி வாங்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும் அதை ஆய்வு செய்து உறுதிப்படுத்தி தனக்கு பரிசை கொடுக்க கோரினார்.
இந்த நிலையில் இந்த லொட்டரி பரிசு உரிமைகோரல் குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும் என லொட்டரி நிறுவன செய்தித் தொடர்பாளர் கேத்தி ஜான்ஸ்டன் கூறியுள்ளார்.