பெண்கள் உலகக் கோப்பையை வெல்லும் அணி வீரர்களுக்கான பரிசுத் தொகை வெளியானது
பெண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
தலா 210,000 பவுண்டுகள்
இதில் இங்கிலாந்து அணி கிண்ணத்தை வெல்லும் என்றால் ஒவ்வொரு வீரர்களும் தலா 210,000 பவுண்டுகள் பரிசாக அள்ள இருக்கின்றனர்.
புதன்கிழமை அவுஸ்திரேலியா அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு நுழைந்த இங்கிலாந்து அணி ஸ்பெயினை எதிர்கொள்கிறது.
பெண்கள் உலகக் கோப்பையில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் சுமார் 24,000 பவுண்டுகள் வரையில் சம்பாதிக்க உள்ளனர்.
அரையிறுதியில் இங்கிலாந்து அணி வென்றுள்ள நிலையில் ஒவ்வொரு வீரருக்கும் 153,000 பவுண்டுகள் தொகை உறுதி என்றாகியுள்ளது.
கிண்ணத்தை வெல்வார்கள் என்றால் ஒவ்வொரு வீரர்களும் தலா 210,000 பவுண்டுகள் பெற இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |