ஒலிம்பிக்கில் தோற்றதால் பாலியல் சீண்டல்! போராட்டத்தில் குதித்த வீராங்கனைகள்..3வது நாளில் நடவடிக்கை
இந்திய மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தின் விளைவாக மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வீராங்கனைகள் போராட்டம்
காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், தேசிய பயிற்சியாளர்களால் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பல ஆண்டுகளாக பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றம்சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் எம்.பி பிரிஜ் பூஷண் சிங் பதிவு விலக வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் பல வீரர், வீராங்கனைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
@IANS
லக்னோவில் அமைந்துள்ள தேசிய முகாமில் பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பல பயிற்சியாளர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டம் மூன்றாவது நாளை எட்டிய நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் இதுகுறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
@Reuters Photo
குழு அமைப்பு
மேலும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஷரன் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
@PTI
மேரி கோம் தலைமையிலான இந்த குழுவில் டோலா பானர்ஜி, அலக்நந்தா அசோக், யோகேஷ்வர் தத் மற்றும் சஹ்தேவ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள தலைவர் பிரிஜ் பூஷண் ஷரன் சிங், யாரும் சிபாரிசு செய்து இந்த இடத்திற்கு வரவில்லை. மக்கள் தான் என்னைத் தெரிவு செய்தார்கள். என்னால் பதவி விலக முடியாது என்று தெரிவித்தார்.
@Twitter file photo