பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா? இதோ அதற்கான விளக்கம்
உலகில் இப்போது கொரோனாவிற்கான தடுப்பூசி மிகவும் அவசியமாகிவிட்டது. இதனால் இந்த கொரோனா தடுப்பூசியை மக்கள் இரண்டு டோஸ்களாக போட்டுக் கொள்கின்றனர்.
அப்படி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு, காய்ச்சல், குளிர், தலைவலி சோர்வு, தசை வலி போன்ற பக்கவிளைவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பெண்களுக்கு இதையும் தாண்டி பல பிரச்சனைகள் இருப்பதாகவும், அதன் பற்றிய விளைவுகளையும் பார்ப்போம்.
பெண்கள் கொரோனா தடுப்பூசி
பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு வழக்கத்தை விட மாதவிடாய் உதிரபோக்கு அதிகமாக இருப்பதை கூறினார்கள். தடுப்பூசி பக்கவிளைவுகள் நிகழ்வு அறிக்கையில் அமைப்பு (VAERS) என அழைக்கப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களிலிருந்து பக்கவிளைவுகள் இதுவரை 56,000 பேர் கலந்து கொண்டார்கள்.
அதில் இவர்களது மாற்றப்பட்ட காலங்கள் குறைந்ததாக 32 பேர் தெரிவித்துள்ளார்கள். இது அளவில் சிறிய சதவீதமாக இருந்தாலும் கொரோனா தடுப்பூசிக்கு இடையே தொடர்பு இருப்பதை உறுதி செய்கிறது.
கொரோனா தடுப்பூசி மாதவிடாய் சுழற்சியை எப்படி பாதிக்கிறது?
தடுப்பூசி மாதவிடாய் சுழற்சியை எப்படி பாதிக்கும் என்பது குறித்து சிறிய அளவு ஆராய்ச்சி உள்ளது. கொரோனா தடுப்பூசி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தினாலும் மாதவிடாய் சுழற்சி காலம் சிறிய மாற்றங்களை உண்டாக்குகிறது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
இது சாதாரண மாதவிடாய் சுழற்சியின் இரத்தபோக்கை விட கனமான உதிரபோக்கை எதிர்கொள்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் தினசரி வாழ்க்கையில் பல மாற்றங்களுக்கும் இவை காரணமாகிறது.
மன அழுத்தம், உடற்பயிற்சி, உணவு, தூக்க சுழற்சி மற்றும் சில மருந்துகள் கூட மாதவிடய் சுழற்சியை மாற்றம் செய்யலாம். இந்த காரணங்களை கவனத்தில் எடுத்துகொண்டால் தடுப்பூசிக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியில் ஏதேனும் மாற்றங்கள் உண்டாவது அசாதாரணமானது அல்ல.
அதிகமான உதிரபோக்கு
மருத்துவ அறிவியல் துறையில் உள்ள வல்லுநர்களின் கூற்றுப்படி மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றம் தடுப்பூசியில் உள்ள நானோ துகள்கள் காரணமாக இருக்கலாம்.
இது மாதவிடாய் சுழற்சி காலத்தை மாற்றக்கூடும். இந்த நானோ துகள்கள் பெண்களில் தற்காலிக நோய் எதிர்ப்பு எதிர்வினை உருவாக்கலாம். இது சில பிளேட்லெட்டுகளை கொல்லக்கூடும்.
இது உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த செல்கள் அடிக்கடி மீளுருவதால் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் உண்டாகிறது. இது தடுப்பூசிக்கு உடலில் உண்டாகும் மற்றொரு அறிகுறி. ஆனால் இது கருவுறுதலை எந்த வகையிலும் பாதிக்காது பெரும்பாலான பெண்கள் இது குறித்து கவலை கொள்கிறார்கள்.
எனினும் இது குறித்து மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
கொரோனா தடுப்பூசியால் மாதவிடாய்
மாதவிடாய் காலத்தில் அதிகமான உதிரபோக்கு தசைப்ப்பிடிப்புகள் சாதாரண பக்கவிளைவுகள்.
ஆனால் இது குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை. இது காய்ச்சல் , தலைவலி போன்ற அறிகுறிகள் போன்று சாதாரணமானது. கொரோனா தடுப்பூசிக்கு பிறகு நீங்கள் இதை உணரலாம்.
கொரோனா தடுப்பூசிக்கு பிறகு மிக அதிகமான மாதவிடாய் உதிரபோக்கை கொண்டிருந்தால் குறிப்பாக ஐந்து நாட்களுக்கு மேலாக உதிரபோக்கு நீடித்தால் மருத்துவரை அணுகுங்கள். அதே போன்று வலி வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.