பிணைக்கைதியான 80 வயது மூதாட்டி: உயிரை காப்பாற்றிய விளையாட்டு
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்துவரும் டெரைஸ் ஹோல்ட் (80) வயது மூதாட்டி, மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
டெரைஸ் ஹோல்ட் (80) என்ற மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த போது, நபர் ஒருவர் அவரது வீட்டுக்குள் உடலில் ஆடைகள் ஏதும் இல்லாமல் கண்ணாடியை உடைத்து கொண்டு நுழைந்துள்ளார்.
கண்ணாடி துண்டுகளால் உடல் கிழிந்திருந்த நிலையில் டெரைஸ் ஹோல்ட் (80) முன் தோன்றி கத்திரிக்கோலை காட்டி கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். பின்னர், அந்த மூதாட்டியை மிரட்டி வீட்டின் தரைதளத்திற்கு அழைத்து சென்று பிணை கைதியாக்கி வைத்துள்ளார்.
டெரைஸ் ஹோல்ட்(80) மற்றும் அவரது மகள் ஹோல்ட் கால்ட்வெல் இருவருக்கும் கடந்த ஆண்டு பிரபலமான வேர்டில்(WORDLE) விளையாட்டை விளையாடும் பழக்கம் கொண்டு இருந்துள்ளது.
மேலும் ஹோல்ட் (80) தினமும் வேர்டில் விளையாட்டின் ஸ்கோரை மகளுக்கு அனுப்பும் பழக்கம் இருந்துள்ளதால், தனது தாய் ஹோல்ட்டிடம் இருந்து வேர்டில் ஸ்கோரும் வரவில்லை, தன்னிடம் பேசவும் இல்லாத நிலையில் அவரது மகள் ஹோல்ட் கால்ட்வெல் சந்தேகமடைந்து சிகாகோ பொலீசாரை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர் புகாரின் அடிப்படையில் மூதாட்டியின் விட்டிருக்குக் சென்று பார்த்ததில் அவர் பிணைக் கதியாக பிடித்து வைத்து இருப்பது தெரிவந்துள்ளது.
மேலும் ஹோல்ட்யை பிடித்து வைத்துள்ள நபர் ஜேம்ஸ் டேவிஸ் என்றும் இவர் மீது அத்துமீறி நுழைதல், கடத்தல் போன்ற வழக்குகள் இருப்பதும் அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிவந்தது. அதனை தொடர்ந்து ஜேம்ஸ் டேவிஸிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அது தோல்வியில் முடியவே அதிரடிப்படையினர் டேவிஸை தாக்கி மூதாட்டியை மீட்டுள்ளனர்.
இது குறித்து மூதாட்டி ஹோல்ட் கூறும்போது நான் உயிருடன் திரும்புவேன் என்று நினைக்கவில்லை. இப்படியான சம்பவங்கள் நடக்குமா என்று நான் யோசித்தது உண்டு. ஆனால் எனக்கே நடந்துள்ளது இதிலிருந்து மீண்டது எனது அதிஷ்டம் என தெரிவித்துள்ளார்.
சில விளையாட்டால் உயிர் பறிபோகும் இந்த நேரத்தில் இந்த வேர்டில் விளையாட்டு உயிரை காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.