கனடாவில் கட்டுமான தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி மரணம்! நடந்தது என்ன?
கனடாவில் கட்டுமான தளத்தில் இருந்து விழுந்த கான்கிரீட் வாளி பலமாக மோதியதில் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
ரொறன்ரோவில் தான் இந்த சம்பவம் நேற்று பகல் 2.45 மணியளவில் நடந்துள்ளது.
அங்குள்ள கட்டுமான தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு தொழிலாளி மீது கான்கிரீட் வாளி பலமாக மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
பின்னர் அவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தொழிலாளியின் உயிர் பிரிந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் வேறு தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகாத நிலையில் ஒன்ராறியோ தொழிலாளர் அமைச்சகம் மூலம் விரைவில் மேலதிக தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.