பூஸ்டர் தடுப்பூசிக்கு தடையா? உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவல்
உலக நாடுகள் மக்களுக்கு மூன்றாவது முறையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
உலகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமாக தாக்கி வருகின்றது. இந்நிலையில் மூன்றாவது அலைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.
உலக நாடுகள் இரண்டாவது டோஸ் செலுத்திய கையோடு மூன்றாவது முறையாக பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறியது, 2ஊ நாடுகளிலில் 10 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டாலே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் சில நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை நீடித்து வருகின்றது. அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் மற்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை எடுத்து கொண்டால் உறுதியாக கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது.
இதனால் பூஸ்டர் தடுப்பூசிக்கு தடை விதிக்க வேண்டும் என்று உலக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.