உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம் - லடாக்கில் கட்ட திட்டமிடும் இந்தியா
proposal for world hightest cricket stadium in adakh: இந்தியாவின் லடாக்கில் உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
லடாக்கில் உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம்
இந்தியா உலகளவில் அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடாக உள்ளது. உலகின் பெரிய மற்றும் உயரமான கிரிக்கெட் மைதானம் இந்தியாவிலே உள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமாக உள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள தௌலாதர் மலைத்தொடருக்கு எதிரே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,780 அடி உயரத்தில் உள்ள மைதானமே உயரமான மைதானமாக உள்ளது.

தற்போது அதனை விட 2 மடங்கு உயரத்தில் கிரிக்கெட் மைதானத்தை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரிலிருந்த 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
தற்போது இங்கு விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
லடாக்கில் உள்ள லே அருகே, திக்ஸே என்ற இடத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,800 அடி உயரத்தில் கிரிக்கெட் மைதானம் கட்ட முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்கும் பணியை லடாக் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.100 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்டால் இதுவே உலகின் உயரமான கிரிக்கெட் மைதானமாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |