தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த புடவை.., அதன் விலை எவ்வளவு தெரியுமா?
கார், தங்கம் மற்றும் வைரங்கள் போண்ற பொருட்கள் விலை பொதுவாக லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரை செல்லும்.
ஆனால் ஒரு புடவை இந்த ஆடம்பர பொருட்களில் ஒன்றாக இருக்கும் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விடயம்.
பல லட்சங்கள் மதிப்புடைய இந்த புடவை விவாஹா பட்டு சேலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த திருமண பட்டு சேலை தூய பட்டினால் தயாரிக்கப்பட்டது மற்றும் சென்னையின் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்டது.
தூய தங்கம் மற்றும் வெள்ளி கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தனித்துவமான புடவை 2018ஆம் ஆண்டில் ரூ. 39,31,627க்கு விற்கப்பட்டது.
இந்த புடவையில் பிரபல இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் கலைப்படைப்புகளைக் கொண்டுள்ளது.
சேலையின் பல்லு 1889ஆம் ஆண்டு வர்மாவின் ஓவியமான இசைக்கலைஞர்களின் கேலக்ஸியின் ஒரு காட்சியைக் காட்டுகிறது.
இதில் 11 பெண்கள் அமர்ந்து இசைக்கருவிகளை வாசிப்பது இடம்பெற்றுள்ளது.
கலை, பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் கலவையால் விவாஹா பட்டு சேலை உலகின் மிக விலையுயர்ந்த சேலையாக உள்ளது.
இந்த சேலையை செய்ய 36 திறமையான நெசவாளர்கள் மொத்தம் 4,760 மணிநேரம் உழைத்தனர். இதனை முழுமையாக முடிக்க ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகியது.
இந்த சேலை 16 வண்ணங்கள் மற்றும் 64 வெவ்வேறு நிற நூல்களைப் பயன்படுத்தி நெய்யப்பட்டது.
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவர் தனது திருமண நாளுக்கு மனைவிக்கு பரிசளிக்க இந்த புடவையை வாங்கினார்.
அதன்பிறகு 2009ஆம் ஆண்டில், குவைத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரும் இதேபோன்ற ஒரு புடவையை வாங்கினார்.
இந்த புடவையை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் சுமார் 8 கிலோகிராம் எடை கொண்டது.
இந்த புடவையில் 59.7 கிராம் தங்கம், 3.913 காரட் வைரங்கள், 120 மில்லிகிராம் பிளாட்டினம், 5 கிராம் வெள்ளி, 2.985 காரட் மாணிக்கங்கள், 55 சென்ட் மரகதம், புஷ்பராகம் மற்றும் பிற ரத்தினங்கள் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |