ரூ.3358 கோடியில் சொத்து வைத்திருக்கும் உலகின் மிகப்பெரிய பணக்கார நாய் - எங்குள்ளது தெரியுமா?
உலகை பொறுத்தளவில் பல பணக்காரர்கள் இருக்கின்றனர். ஆனால் உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாய் ஒன்று இருக்கிறது.
அதன் வாழ்வாதாரங்கள் மற்றும் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகளோ நெருங்கிய உறவினர்களோ இல்லாத பணக்காரப் பெண்ணான கவுண்டஸ் கோர்லோட்டா லிபென்ஸ்டீன், குந்தர் III என்ற நாயை வளர்த்துள்ளார். அதற்கு அவர் முழு சொத்தையும் எழுதி வைத்துள்ளார்.
குறித்த நாயானது இறந்தவுடன் அதன் சந்ததியனரின் அடிப்படையில் இந்த செல்வம் மாறி செல்கிறது.
அந்தவகையில் தற்போது குந்தர் VI என்ற நாயிடம் இந்த செல்வம் இருக்கிறது.
குந்தர் VI இன் பணத்தை யார் நிர்வகிக்கிறார்கள்?
ஒரு நாய் எப்படி இவ்வளவு பெரிய செல்வத்திற்கு பொறுப்பாக முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.
குந்தரின் செல்வம் மனித அறங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அறங்காவலர்கள் பணத்தை முதலீடு செய்வதற்கும், பணம் தொடர்ந்து வளருவதை உறுதி செய்வதற்கு பொறுப்பாகும். இது ஓர் german shepherd நாயாகும். தற்போது ஜேர்மனியில் வசித்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குந்தரின் தற்போதைய வாழ்க்கை
குந்தரின் பரம்பரை இன்று வரையில் ஆடம்பர வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து வருகிறது.
தனிப்பட்ட படகு, விலைமதிப்புள்ள நாய் உணவு போன்றவற்றை அனுபவித்து வருகிறது.
தற்போது, குந்தர் இத்தாலியின் டஸ்கனியில் வசிக்கிறார். அவர் தனது ஓட்டுநருடன் BMW இல் ஊர் சுற்றி பயணம் வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த நாயின் முழு சொத்தும் சுமார் ரூ.3358 கோடியில் இருக்கும் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |