உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி டிரா ஆனால்? யார் வெற்றியாளர் தெரியுமா? பிசிசிஐ விளக்கம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி டிரா ஆனால், என்ன விதி பின்பற்றப்படும் என்பது குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொடரானது அவுஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவு என ஒன்பது அணிகளும் 25 தொடரில் மோதின. இதில் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில், வரும் ஜுன் 22-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்போட்டி ஒருவேளை டிரா ஆகினால், முடிவு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பலருக்கும் சந்தேகம் எழுந்தது.
இது குறித்து பிசிசிஐ தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், போட்டி நடத்த முடியாமல் போனால் டை பிரேக்கர் ஏதும் கிடையாது என்றும் ஆனால் ரிசர்வ் டே நிச்சயம் உண்டு என்றும் அறிவித்துள்ளது.
அதேபோன்று நடைபெறும் இறுதிப் போட்டி டிராவிலோ அல்லது இரு அணிகளும் டையில் முடித்தாலோ இரு அணிகளுக்குமே சாம்பியன் பட்டம் பகிர்ந்தளிக்கப்படும்.
அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் சாம்பியன் அணிகளாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.