இந்தியாவில் கொதிக்கும் வெப்பம் காரணமாக 170 பேர் பரிதாபமாக உயிரிழப்பு (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை காண சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீர்முழ்கி கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே மிக வேகமாக வெப்பமயமாகும் கண்டமாக ஐரோப்பா மாறி வருவதாக உலக காலநிலை அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் ஒன்று சிங்கப்பூரிலிருந்து லண்டன் செல்கையில் நடுவானில் பயங்கரமாக குலுங்கியபோது நிலைதடுமாறி விழுந்த பணிப்பெண்கள் இருவருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போர்க்கால குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 8,100 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் அதிகரிக்கும் வெப்ப அலைகளின் தாக்கத்தால் கிட்டத்தட்ட 170 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |