இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத வெடிகுண்டு கண்டெடுப்பு; 13000 பேர் வெளியேற்றம்
இரண்டாம் உலகப் போரின்போது வெடிக்காத வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ஜேர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் இருந்து 13,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
ஒரு டன் ஷெல் வெடிகுண்டு
டுசெல்டார்ஃப் (Dusseldorf) நகர மிருகக்காட்சிசாலைக்கு அருகில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு டன் எடைகொண்ட ஷெல் வெடிகுண்டு செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
மிருகக்காட்சிசாலையின் வேலை நேரத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உடனடியாக 500 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன மற்றும் மேலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
PA
அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன மற்றும் மேலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
வெடிகுண்டு அகற்றும் பணியின் ஒரு பகுதியாக அப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டன. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் முடிந்ததா என்பது தெரியவில்லை.
இது முதல் முறையல்ல
ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜேர்மன் மண்ணில் இன்னும் ஆயிரக்கணக்கான குண்டுகள் செயலிழக்கக் கிடப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
Defused WWII bomb near the European Central Bank in Frankfurt, Germany, July 7 2019. Photo: AP
2017-ஆம் ஆண்டில், பிராங்பேர்ட்டில் 1.4 டன் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது, 65 ஆயிரம் மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
டிசம்பர் 2021-ல், முனிச் நிலையத்திற்கு அருகிலுள்ள கட்டுமான தளத்தில் இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு வெடித்தது, அதில் நான்கு பேர் காயமடைந்தனர் மற்றும் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
wwii bomb found, wwii bomb found in Germany, unexploded wwii bomb found, World War II Bomb, unexploded wwii bomb found in Dusseldorf