மூன்றாம் உலகப்போர் நெருங்குகிறது... என்னால் மட்டுமே அதை தடுக்கமுடியும்: கூறும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி
அமெரிக்காவில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், மூன்றாம் உலகப்போரை தன்னால் மட்டுமே தடுக்கமுடியும் என்று கூறியுள்ளார்.
மூன்றாம் உலகப்போர் நெருங்குகிறது...
அமெரிக்காவின் Iowa மாகாணத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார்.
அப்போது அவர், உலகம் மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் இருப்பதாக தெரிவித்தார். அந்தப் போர் சாதாரண போர்களைப் போலிருக்காது என்று கூறும் ட்ரம்ப், நவயுக ஆயுதங்கள் காரணமாக மூன்றாம் உலகப்போரால் முழுமையாக அழிவு ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
Photo by KAMIL KRZACZYNSKI / AFP)(AFP)
என்னால் மட்டுமே அதை தடுக்கமுடியும்
மூன்றாம் உலகப்போர் நெருங்குகிறது என்று மட்டும் கூறவில்லை ட்ரம்ப். தற்கால ஆயுதங்கள் காரணமாக உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் ஆபத்தில் உள்ளதாகவும், மூன்றாம் உலகப்போரைத் தடுக்க தன்னால் மட்டுமே முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தான் தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால் உக்ரைன் ரஷ்யப் போர் உட்பட பல முரண்பாடுகளைத் தன்னால் தவிர்த்திர்க்கமுடியும் என்றும் கூறியுள்ளார் அவர்.
ட்ரம்பின் கூற்றை ஆமோதிப்பது போல, ஹங்கேரியின் பிரதமரான Viktor Orbanம், ட்ரம்ப் மட்டும் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால், உக்ரைனிலோ, ஐரோப்பாவிலோ போரே இருந்திருக்காது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |