பறிபோன 2 தமிழக வீரர்களின் உலகக்கோப்பை கனவு! இந்திய அணியில் தேர்வாகாததற்கு இதாங்க காரணம்... ரொம்ப பாவம் தான்
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் பல வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பும், சில வீரர்களுக்கு ஏமாற்றமும் கிடைத்தது.
அந்த வகையில் இந்த டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு காயம் காரணமாக பறிபோனதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வாஷிங்டன் சுந்தர்
இவர் ஏற்கனவே இந்திய அணிக்காக அறிமுகமாகி தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதனால் நிச்சயம் டி20 உலக கோப்பை தொடரில் முதன்மை சுழற்பந்துவீச்சாளராக இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம் பிடித்த அவர் வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இடம் பிடிக்க முடியாமல் போனது.
நடராஜன்
கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய தொடரின் போது இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் மிக சிறப்பாக செயல்பட்டார்.
ஆனால் அவரும் ஐபிஎல் தொடரின்போது இடையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறியதால் தற்போது காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இடம் பெற முடியாமல் போனது.
அதே சமயம் இன்னொரு தமிழக வீரர் அஸ்வின் அணியில் தேர்வானது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.