உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை இன்று ஜேர்மனியில் தொடக்கம்!
ஜேர்மனி இன்று ஹைட்ரஜனால் இயங்கும் ஒரு ரயில் பாதையை திறந்து வைக்கிறது.
இது உலகிலேயே முத்த முதல்முறையாகும் மற்றும் ஜேர்மனியின் பசுமை ரயில் போக்குவரத்திற்கான ஒரு பாரிய தொடக்கம்.
உலகிலேயே முதல்முறையாக முழுவதுமாக ஹைட்ரஜனால் இயங்கும் ஒரு ரயில் பாதையை ஜேர்மனி இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கிறது.
ஜேர்மன் மாநிலமான லோயர் சாக்சோனிக்கு பிரெஞ்சு தொழில்துறை நிறுவனமான ஆல்ஸ்டாம் (Alstom) ஹைட்ரஜனால் இயங்கும் 14 ரயில்களை வாங்கியுள்ளது.
இந்த ரயில்கள், இன்று ஹாம்பர்க்கிற்கு அருகிலுள்ள குக்ஸ்ஹேவன், ப்ரெமர்ஹேவன், ப்ரெமர்வோர்ட் மற்றும் பக்ஸ்டெஹுட் நகரங்களை இணைக்கும் 100 கிலோமீட்டர் (60 மைல்) பாதையில் டீசல் என்ஜின்களுக்கு பதிலாக மாற்றப்பட்டு இயக்கப்படவுள்ளன.
Alstom
இன்று முதல் இந்த பாதையில் பயணிக்கும் பயணிகள் புதிய ஹைட்ரஜனால் இயங்கும் ரயில்களில் பயணிப்பார்கள் என்று Alstom-ன் திட்ட மேலாளர் ஸ்டீபன் ஷ்ராங்க் கூறியுள்ளார்.
ஜேர்மனியில் இன்னும் 20 சதவீத பயணங்களுக்கு சக்தி அளிக்கும் வகையில், ஹைட்ரஜன் ரயில்கள் இரயில் துறையை டிகார்பனைஸ் செய்வதற்கும் டீசலை மாற்றுவதற்கும் ஒரு நம்பிக்கைக்குரிய வழியாக மாறியுள்ளது.
சுற்றுப்புற காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனுடன் ஹைட்ரஜனைக் கலக்கின்றன. இதன் மூலம் ரயிலை இழுக்க தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
Alstom
Coradia iLint எனும் இந்த ரயில்கள் தெற்கு பிரெஞ்சு நகரமான Tarbes-ல் வடிவமைக்கப்பட்டு, மத்திய ஜேர்மனியில் உள்ள Salzgitter-ல் அசெம்பிள் செய்யப்படுகின்றன.
இந்த திட்டம் "பல மில்லியன் கணக்கான யூரோக்கள்" முதலீட்டை ஈர்த்தது மற்றும் இரு நாடுகளிலும் 80 பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியது என்று Alstom தெரிவித்துள்ளது.
Alstom