உப்பு, சர்க்கரைக்கு தனி வரி! பிரித்தானியாவின் அசரவைக்கும் புதிய உத்தி!
உலகிலேயே முதல் நாடாக, பிரித்தானியா உப்பு மற்றும் சர்க்கரைக்கு மட்டும் தனியாக கூடுதல் வரியை விதிக்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் ஆரோக்கியத்தை உயர்த்துவதற்கும், NHS ஐ காப்பாற்றுவதற்கும் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக பிரித்தானியாவில் அன்றாட உணவுகளின் விலை அதிகரிக்கப்பட உள்ளது என, ஒரு முக்கிய புதிய அறிக்கை கூறுகிறது.
சர்க்கரை மற்றும் உப்பு மீதான வரிகளின் உதவியால் - பிரித்தானிய உணவு பழக்கங்களில் ஏற்படும் ஒரு மாற்றம், பல உயிர்களைக் காப்பாற்றும் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் என்று தேசிய உணவு மூலோபாயம் (National Food Strategy) கூறுகிறது.
இந்த புதிய வரி திட்டம் அமுலுக்கு வந்தால், ஒவ்வொரு பிரித்தானியர்களும் வருடத்திற்கு சராசரியாக 60 பவுண்ட்ஸ் வரி செலுத்த நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்முலம், அரசாங்கத்திற்கு 3.4 பில்லியன் பவுண்ட்ஸ் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இவ்வாறு சர்க்கரை மாற்று உப்புக்கு வரி விதிப்பதானால், இந்த இரண்டு பொருட்களை மூலப்பொருட்களாக பயன்படுத்தி தயாரிக்கப்படும், உடலுக்கு ஆரோக்கியம் அற்ற உணவு பொருள்களின் விலை கணிசமாக உயரும்.
இதனால் ஜங்க் புட், பாஸ்ட் புட் என சொல்லப்படும் உணவுகளை மக்கள் சற்று குறைவாக வாங்கி உண்ணும் பழக்கம் ஏற்படும். இதனால் நாட்டு மக்களின் ஆரோக்கியமும் காக்கப்படும் என நம்பப்படுகிறது.
மேலும், அரசாங்கத்திற்கு இதன்முலம் கிடைக்கும் வருவாயை இலவச பள்ளி உணவு திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், ஏழைக் குடும்பங்களை ஆதரிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் என National Food Strategy பரிந்துரைக்கிறது.