உலகின் மிக விலையுயர்ந்த வீடு விற்பனைக்கு., இதன் விலை எவ்வளவு தெரியுமா?
பிரான்சில் உலகின் மிக விலையுயர்ந்த வீடு ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது.
பிரான்சின் Seine-et-Marne இல் உள்ள Chateau d'Armainevilliers, உலகின் மிக விலையுயர்ந்த வீடு என்று நம்பப்படுகிறது.
Mansion Global-ன் கூற்றுப்படி, இந்த வீடு ஒரு காலத்தில் ரோத்ஸ்சைல்ட் குடும்ப (Rothschild family) உறுப்பினருக்கும் பின்னர் மொராக்கோ (Morocco) மன்னருக்கும் சொந்தமானது.
ஈபிள் கோபுரத்திலிருந்து கிழக்கே 30 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த Chateau d'Armainevilliers நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
1100-களில் கட்டப்பட்ட இந்த கோட்டை பிரெஞ்சு புரட்சியின்போது பகுதியளவு அழிக்கப்பட்டது, மேலும் Rochefoucauld Doudouville குடும்பம் அதிக நிலத்தை வாங்கி கோட்டையை புதுப்பித்தது.
அவர்கள் 1980-களில் மொராக்கோவின் மன்னர் இரண்டாம் ஹாசனுக்கு சேட்டோ டி ஆர்மைனேவில்லியர்ஸை விற்றனர்.
1999-ஆம் ஆண்டு மன்னர் இரண்டாம் ஹாசன் இறந்த பிறகு, கடைசியாக 2008-ஆம் ஆண்டில் அவரது மகன் சொத்தை கையகப்படுத்தி 200 மில்லியன் டொலருக்கு மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றுள்ளார்.
ஆனால், அதை வாங்கிய அந்தப் பெரும்புள்ளி யார் என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இங்கு 100 அறைகள் உள்ளன. மூன்று லிஃப்ட், ஐந்து சலூன்கள், 17 கருப்பொருள் படுக்கையறைகள் மற்றும் அதிநவீன சமையலறை ஆகியவை உள்ளன.
மேலும் இந்த எஸ்டேட்டில், வரவேற்புரை, 50 குதிரைகளுக்கான இடம், 36 வெவ்வேறு பூங்காக்கள், குளிர் அறைகள், சேமிப்பு இடங்கள் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் உட்பட பல வசதிகளைக் கொண்டுள்ளது.
இப்போது, இந்த சொத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து 425 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இது இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.8168 கோடி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
World’s most expensive house on sale, France, Paris, Château d’Armainvilliers, World’s most expensive house price