ஒலிம்பிக்கில் பிரான்ஸ் வீரர் செய்த மோசமான செயல்... சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வீடியோ
ஆண்களுக்கான ஒலிம்பிக் மாரத்தான் போட்டியின்போது பிரான்ஸ் சார்பில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றவர் Morhad Amdouni (33).
கிட்டத்தட்ட பந்தயம் முடிவடையும் தருவாயில், களைத்துப்போயிருந்த வீரர்கள், ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் போத்தல்களை ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டபடி தங்கள் ஓட்டத்தைத் தொடர்ந்தனர்.
அப்போது, அவர்களுக்குப் பின்னால் ஓடி வந்த Amdouni, வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த தண்ணீர் போத்தல்களை கையால் கீழே தள்ளிவிட்டபடியே ஓடினார். அதனால், அவருக்குப் பின்னால் வந்த வீரர்களுக்கு தண்ணீர் கிடைக்காத ஒரு சூழல் உருவானது.
தனக்குப் பின்னால் வந்த வீரர்களுக்கு தண்ணீர் கிடைக்கக்கூடாது என்பதற்காகவே Amdouni தண்ணீர் போத்தல்களை தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Thoughts on Amdouni knocking over an entire row of water before taking the last one? pic.twitter.com/qrPaSzxLBW
— Ben St Lawrence (@bennysaint) August 8, 2021
ஆனால், அது தற்செயலாக நடந்தது என்று கூறியுள்ள சிலர், அதற்கு அடுத்ததாகவும் ஒரு மேஜையில் தண்ணீர் போத்தல்கள் இருந்ததாகவும், வீரர்கள் அந்த மேஜையிலிருந்தும் தண்ணீரை எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தது என்றும் கூறியுள்ளார்கள்.
எப்படியும், வீரர்கள் ஆளாளுக்கு ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டுக்கு கௌரவத்தைக் கொண்டுவர முயன்றுவரும் நிலையில், Amdouni தன் நாட்டுக்கு அவப்பெயரைக் கொண்டுவந்துவிட்டார்.