உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவில் பிளேயிங் லெவலில் இவர் நிச்சயம் இருக்கனும்! வாசிம் ஜாபர் சொல்லும் காரணம்
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதியிப் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர், வாசிம்ஜாபர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வரும் 18-ஆம் திகதி இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதை ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்து காத்துள்ளது.
இந்த போட்டி குறித்து முன்னணி வீரர்கள் பலரும், தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் பும்ராஹ் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவருக்கும் நிச்சயம் இடம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இருவரும் மிக சிறந்த பந்துவீச்சாளர்கள், இருவருடன் சேர்த்து இஷாந்த் சர்மாவிற்கு அணியில் இடம் கொடுக்க வேண்டும். அவுஸ்திரேலியா தொடரில் முகமது சிராஜ் மிக சிறப்பாக பந்துவீசினார்.
ஆனால் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா போன்ற ஒரு அனுபவ வீரரை வெளியில் அமர்த்துவது நிச்சயம் சரியாக இருக்காது.
இங்கிலாந்து ஆடுகளங்களிலும் இஷாந்த் சர்மா அதிக அனுபவம் உள்ளவர். அதே போல் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இஷாந்த் சர்மா மிக சிறப்பாக பந்துவீசக்கூடியவர்.
எனவே என்னை பொறுத்தவரையில் டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் முகமது சிராஜிற்கு பதிலாக இஷாந்த் சர்மாவிற்கே அணியில் இடம் கொடுக்க வேண்டும்