இந்தியா-நியூசிலாந்து இறுதிப் போட்டி நடக்குமா? வெளியான அடுத்த 2 நாள் வானிலை நிலவரம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் முதல் நாள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாள் குறித்த வானிலை நிலவரம் வெளியாகியுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இன்று சவுத்தாம்டனில் துவங்கியது. ஆனால், டாஸ் கூட போடவிடாமல் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர். இது சவுத்தாம்டனில் மழை காலம் என்பதால், இந்த மாதத்தில் எப்படி இந்த போட்டியை இங்கு ஐசிசி வைத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், சவுத்தாம்ப்டன் நகரின் வானிலை அறிக்கையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டியின் பெரும்பாலான பகுதிகள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதுபோன்று போட்டி மழையால் பாதிக்கப்படும் வேளையில் ஆறாவது நாள் போட்டி நடைபெறும் என ஐசிசி அறிவித்திருந்தாலும் பெரும்பாலான ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் போது நிச்சயம் இந்த போட்டியை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
அப்படி அதையும் மீறி போட்டி தொடர்ந்தால், நிச்சயம் ஆட்டம் டிராவை நோக்கியே செல்லும், ஒரு உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியை பார்த்தது போன்றே இருக்காது.
இதனால் இந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றம் என்றே கூறலாம்.