உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்துள்ளது.
ஒருநாள் தொடருக்கு எப்படி உலக் கோப்பை தொடர் இருக்கிறதோ, டி20-க்கு எப்படி உலகக் கோப்பை போட்டிகள் இருக்கிறதோ, அதே போன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த ஜுலை மாதம் 2019-ஆம் ஆண்டு இந்த போட்டி துவங்கிய நிலையில், அதன் இறுதிப் போட்டிக்கு இந்தியா-நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டி வரும் 18-ஆம் திகதி இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்டனில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்துள்ளது. அதன் படி, சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் 31,68,75,840 கோடி ரூபாய்) வழங்கப்படும்.
தோல்வியடையும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் 15,84,37,920 கோடி ரூபாய்) கொடுக்கப்படும். ஒருவேளை இரு அணிகள் இடையேயான இந்த போட்டி டிராவில் முடிந்தால், மொத்த பரிசுத்தொகையும் இரு அணிகளுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.