2ஆம் உலகப்போரில் கடைசியாக உயிர்பிழைத்த பிரித்தானியரின் இறுதிச்சடங்கு! திரளாக கூடிய படைவீரர்கள்
இரண்டாம் உலகப்போரில் பராட்ரூப்பர்களில் ஒருவராக இருந்த சாமுவேல் ப்ரேவின் இறுதிச்சடங்கில் ஏராளமான படைவீரர்கள், சேவைப் பணியாளர்கள் கூடினர்.
Paratroopers
கடந்த அக்டோபர் மாதம் முல்லியனைச் சேர்ந்த ஹெர்பெர்ட் சாமுவேல் ப்ரே தனது 97வது வயதில் காலமானார்.
இவர் இரண்டாம் உலகப்போரில் Paratroopers பிரிவில் ஒருவராக இருந்தார். மேலும் கடைசியாக உயிர் பிழைத்த நபராகவும் இவர் இருந்தார்.
ஹெர்பெர்ட்டின் இறுதிச்சடங்கு முல்லியன் பாரிஷ் தேவாலயத்தில் ஒரு ஊர்வலத்திற்குப் பிறகு, சேவை செய்த மற்றும் முன்னாள் பணியாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் சீருடைகள் மற்றும் பதக்கங்களை அணிந்து அஞ்சலி செலுத்தினர்.
கால்பந்து கிளப்பின் தலைவர்
ஹெர்பியின் பேரனான ஜோர்டன் கூறும்போது, 'நாங்கள் ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டோம், நான் சந்தித்த வலிமையான மனிதர், இரண்டாம் உலகப்போரின் Paratrooper...க்ராண்டாட் ஹெர்பி எப்போதும் என் இதயத்தில் இருப்பார், என் முழுமையான ஹீரோ' என தெரிவித்தார்.
காலமான ஹெர்பி தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கிராமத்தில் வாழ்ந்தார். அத்துடன் சேவையில் இருந்து வீடு திரும்பிய பிறகு முல்லியன் கால்பந்து கிளப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |