ஜேர்மன் நகரமொன்றில் 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிப்பு: 3,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்
ஜேர்மன் நகரமொன்றில் 500 கிலோகிராம் எடையுள்ள இரண்டாம் உலகப்போர்க் கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுமார் 150 பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டனர்.
நேற்று, ஜேர்மனியின் Mannheim நகரில், கட்டிப்பணிக்காக பள்ளம் தோண்டிக்கொண்டிருந்த பணியாளர்கள் சிலர், 500 கிலோகிராம் எடையுள்ள இரண்டாம் உலகப்போர்க் கால வெடிகுண்டு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக, அப்பகுதியில் வசித்த சுமார் 3,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனர். போக்குவரத்தும் சிறிது பாதிக்கப்பட்டது.
நேற்று மாலை, அந்த குண்டு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிசார் அறிவித்ததுடன், மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பலாம் என்றும் அறிவித்தனர்.
👏 #Entschärfung der #Fliegerbombe auf #Franklin erfolgreich - Einsatzmaßnahmen von Polizei und Feuerwehr beendet.
— Polizei Mannheim (@PolizeiMannheim) April 22, 2021
👉Betroffene Bewohner können wieder in ihre Häuser und Wohnungen zurückkehren.
👉 Alle Verkehrssperrungen sowie Einschränkungen Bahnverkehr aufgehoben.