விமான நிலையத்தில் பயணி ஒருவர் சூட்கேசுடன் நுழைந்தபோது ஒலித்த அலாரம்: எக்ஸ்ரேயில் தெரிந்த திகைக்கவைத்த காட்சி
அமெரிக்கர் ஒருவர் விமான நிலையத்திற்குள் சூட்கேஸ் ஒன்றுடன் நுழைய முற்பட்டபோது திடீரென அலாரம் ஒலித்தது.
எக்ஸ்ரேயில் தெரிந்த காட்சி
உண்மையில், அந்த அமெரிக்கர் விமான நிலையத்துக்குள் நுழைந்துவிட்டார். அதன் பின் அவரது உடைமைகளை அனுப்பும்போது அலாரம் ஒலித்திருக்கிறது.
உஷாரான அதிகாரிகள் என்ன நடக்கிறது என எக்ஸ்ரே கருவியைப் பார்க்க, எக்ஸ்ரேயில் ஒரு சூட்கேசுக்குள் ஏதோ வித்தியாசமாக இருப்பது தெரியவந்துள்ளது.
TSA
சோதனையில் தெரியவந்த உண்மை
உடனே அந்த சூட்கேசை வெளியே எடுத்த அதிகாரிகள் அதைத் திறந்துபார்த்தால், சூட்கேசுக்குள் ஒரு உயிருள்ள பூனை இருப்பது தெரியவந்துள்ளது.
அதாவது, அந்த பயணி புறப்படுவதற்காக பொருட்களை சூட்கேசில் எடுத்துவைக்கும்போது, அவருக்குத் தெரியாமல் அந்த பூனை சூட்கேசுக்குள் போய் உட்கார்ந்துகொண்டிருக்கிறது.
நல்லவேளையாக அதிகாரிகள் பூனையைக் கண்டுபிடித்தார்கள். இல்லையானால், பொருட்கள் வைக்கும் இடத்தின் அழுத்தம் தாங்காமல் அந்த பூனை உயிரிழந்திருக்கக்கூடும்.
கடைசியில் பூனை அதன் உரிமையாளர் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட, இந்த களேபரத்தில் அதன் உரிமையாளர் அந்த விமானத்தைத் தவறவிட நேர்ந்ததால் அடுத்த விமானத்தில் பயணம் புறப்பட நேர்ந்தது.