புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எக்ஸ் ரே சோதனைகள்: பிரீத்தி பட்டேலின் அடுத்த கட்ட நடவடிக்கை
புலம்பெயர்வோரின் உண்மையான வயதைக் கண்டறிவதற்காக எக்ஸ் ரே சோதனைகளை பயன்படுத்த பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேல் திட்டமிட்டுள்ளார்.
தங்களை சிறுவர்கள் என்று கூறி பிரித்தானியாவில் புகலிடம் கோரியவர்களில் 55 சதவிகிதம்பேர் பொய் சொல்லியுள்ளார்கள் என்பதை உள்துறை அலுவலகம் கண்டுபிடித்துள்ளது.
அப்படி பொய் சொல்லி வயதைக் குறைத்துக் கூறியவர்களில் ஈராக் நாட்டைச் சேர்ந்த அஹமது ஹுசேன் என்னும் புலம்பெயர்ந்தவரும் ஒருவர். தனக்கு 16 வயது என்று கூறி புகலிடம் கோரிய ஹுசேன், சுரங்க ரயிலில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதில் 69 பேர் காயமடைந்தார்கள்.
அவரது வயது இன்றுவரை தெரியாத நிலையில், அவருக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, ஹுசேனுக்கு 18 வயது முதல் 21 வயது வரை இருக்கலாம் என்று கூறினார்.
ஆகவே, இப்படி பொய் சொல்லி ஏமாற்றுபவர்களின் வயதைக் கண்டுபிடிப்பதற்காக, தேசிய மற்றும் எல்லைகள் மசோதாவில் கொண்டுவரப்பட இருக்கும் சட்டத் திருத்தங்களின் கீழ், பொய் சொல்வதாக கருதுபவர்களின் மேல் கையின் எலும்பின் அளவை எக்ஸ் ரே எடுத்து அதிலிருந்து அவரது வயதைக் கண்டுபிடிக்கும் முறைக்கு அனுமதியளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே பல நாடுகள் ஒருவரின் உண்மையான வயதைக் கண்டுபிடிக்க எக்ஸ் ரே முறையை பயன்படுத்தினாலும், இதுவரை பிரித்தானியாவில் அந்த நடைமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.