வங்கக் கடலில் யாஸ் புயல் உருவானது! மக்கள் வெளியேற்றம்
கிழக்கு-வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அது இன்று மேலும் தீவிர புயலாக மாறும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது போர்ட் பிளேரில் இருந்து 600 கிமீ தொலைவில் புயல் மையம்கொண்டுள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், பின்னர் அதிதீவிர புயலாகவும் மாறும் எனவும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா-வங்காளதேசம் இடையே 26ம் தேதி மாலையில் கரை கடக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்போது மணிக்கு 165 கிமீ வேகத்தில் பலத்தக்காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்று தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மீட்பு குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.