நான் கொரோனாவால் செத்தாலும் ஆவியாக வந்து இதை செய்வேன்! வைரலாகும் பிரபலத்தின் சர்ச்சை டுவிட்
நான் கொரோனாவால் இறந்தாலும், ஆவியாக வந்து பிரதமர் மோடிக்கே வாக்களிப்பேன் என்று யஷ்வந்த் சின்ஹா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவே இப்போது கொரோனாவால் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் தவித்து வருகிறது.
குறிப்பாக வட மாநிலங்கள் கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தலைநகர் டெல்லியிலும் இதே நிலை என்பதால், நாட்டில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
I may die of Covid but even as a ghost I shall still vote for Modi. What will you do, Sir?
— Yashwant Sinha (@YashwantSinha) April 22, 2021
இந்நிலையில், பாஜக-வின் முன்னாள் அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகியுமான, யஷ்வந்த் சின்ஹா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் கொரோனாவால் இறந்தாலும், ஆவியாக வந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிப்பேன், நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் பெரும் விவாதமாமும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.