சாதாரண நிலைக்கு திரும்பும் பிரித்தானியா... ஆனால் இந்த விடயங்களை செய்ய முடியாது
பிரித்தானியா நீண்ட பல மாதங்களுக்கு பிறகு சாதாரண நிலைக்கு திரும்பவிருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு நான்கு முக்கிய விடயங்கள் குறித்து நிபுணர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மக்கள் சகஜ நிலைக்கு திரும்ப உள்ளனர். நீண்ட 16 மாதங்களாக மூடப்பட்டிருந்த குறிப்பிட்ட சில தொழில் கூடங்கள், மீண்டும் திறந்து செயல்பட உள்ளன.
இருப்பினும், நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசு தரப்பிலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று முற்றாக ஒழிந்துவிடவில்லை எனவும், தேவையான இடங்களில் மாஸ்க் கட்டாயம் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரித்தானியா சாதரண நிலைக்கு திரும்பியுள்ளதால், மாஸ்க்களை குப்பையில் போட வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள். தற்போது பொதுவெளியில் மாஸ்க் கட்டாயமல்ல, ஆனால் நீங்கள் பொது பேருந்து சேவையை பயன்படுத்த நேரிட்டால், அல்லது வணிக வளாகம் செல்ல நேரிட்டால் மாஸ்க் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்கிறார்கள் நிபுணர்கள்.
பொது பேருந்து சேவையை பயன்படுத்தும் மக்கள் கண்டிப்பாக மாஸ்க் பயன்படுத்துவது பயனளிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ரயில், மற்றும் டிராம் சேவையை பயன்படுத்துவோர் கண்டிப்பாக மாஸ்க் பயன்படுத்துவது தொற்று பரவலை கட்டுப்படுத்தும் என்கிறார்கள்.
பிரித்தானியர்களுக்கு இனி விருப்பம் போல சுற்றுலா செல்லலாம். கட்டுப்பாடுகள் மொத்தமும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டும், பயணத்திற்கு பிறகு தனிமைப்படுத்தலுக்கு இலக்காக மாட்டார்கள்.
இருப்பினும், பிரான்ஸ் சென்று திரும்புபவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக நேரிடும் என்றே கூறப்படுகிறது.