ஏரிக்கரையில் கிடந்த 21 வயது இளம்பெண்ணின் சடலம்! அங்கு சென்ற பொலிசார் கண்ட அதிர்ச்சி காட்சி.. தலைசுற்றவைக்கும் சம்பவம்

death investigation love younggirl
By Raju Sep 29, 2021 03:20 AM GMT
Report

தமிழகத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் ஏரிக்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள நரசமங்கலம் காலனி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் ஜெயஸ்ரீ (21). இவர் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24-ந் திகதி வேலைக்குச் சென்ற ஜெயஸ்ரீ மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதற்கிடையே நேற்று முன்தினம் நரசமங்கலம் பகுதியிலுள்ள ஏரிக்கரையில் பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.

ஏரிக்கரையில் கிடந்த 21 வயது இளம்பெண்ணின் சடலம்! அங்கு சென்ற பொலிசார் கண்ட அதிர்ச்சி காட்சி.. தலைசுற்றவைக்கும் சம்பவம் | Young Girl Corpse Found Near Water Thiruvallur

அப்போது அங்கு அவர்கள் சென்று பார்த்த போது அங்குள்ள முட்செடியில் துப்பட்டாவால் ஜெயஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைத்தனர். அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஜெயஸ்ரீயின் உடலை கண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

பின்னர் பொலிசார் இளம்பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெயஸ்ரீயின் பெற்றோர், தங்கள் மகள் மரணத்தில் அவர் காதலித்துவந்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர். அதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இளவரசனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்த மப்பேடு பொலிசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.

அதேபோல், இளம்பெண்ணின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்ததோடு, வேலைக்குச் செல்லும்போது அவர் எடுத்துச் சென்ற செல்போன், பணப்பை உள்ளிட்ட பொருள்கள் சம்பவ இடத்தில் இல்லாததும் பொலிசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது, இதையடுத்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையில், பொலிசார் தன்னைத் தேடி வரும் தகவலறிந்து, இளவரசன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், உயிரிழந்த ஜெயஸ்ரீயின் தந்தை சுந்தரமூர்த்தி மப்பேடு காவல் நிலையத்தில், தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருப்பதாகத் தாங்கள் சந்தேகிப்பதாகப் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து காதல் விவகாரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US