அண்ணான பழகியவரின் அசிங்கமான செயல்! பதறி போன பள்ளி மாணவி: தந்தைக்கு கிடைத்த அடி-உதை
தமிழகத்தில் சிறுமி ஒருவர் இளைஞரிடம் அண்ணன் போன்று நினைத்து பழகி வந்த நிலையில், அவர் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சூரன்குடி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் 25 வயது மகன், பாலமுருகன் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பழனிச்சாமியிடம் அண்ணன் என்ற முறையில் பழகி வந்துள்ளார்.
ஆனால், திடீரென்று ஒருநாள் பழனிச்சாமி, அந்த மாணவியிடம் நான் உன்னை காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு சிறுமி மறுத்துள்ளார். இருப்பினும் பழனிச்சாமி தொடர்ந்து சிறுமியிடம் தன் காதலை கூறி வற்புறுத்தி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், சிறுமி தொடர்ந்து மறுத்து வந்ததால், நீ குளிக்கும் போது நான் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும், நீ என்னை காதலிக்கவில்லை என்றால், நான் இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் அந்த சிறுமி உடனடியாக தன்னுடைய பெற்றோரிடம் கூற, அவர்கள் பாலமுருகன் வீட்டிற்கு வந்து இது குறித்து கேட்ட போது, அவர்கள் சிறுமியின் தந்தையை தாக்கியுள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து உடனடியாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பொலிசார் பாலமுருகனை போக்ஸோசட்டத்தின் கீழ் கைது செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.