என் மாமா சாவுக்கு நீ தான் டி காரணம்! அத்தையை துடி துடிக்க கொன்ற மாப்பிள்ளை: கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர்
தமிழகத்தில் கணவரின் முதலாம் ஆண்டு நாளில், மனைவி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, பிள்ளையார் பெரியவன்தட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவருக்கு அருணா என்ற மனைவியும், கமலேஷ், அகிலேஷ் என இரண்டு மகன்களும் உள்ளனர்.
செல்வமுருகன், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குடும்ப பிரச்சனை காரணமாக, செல்வமுருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அவருடைய மனைவி, அருணா, தன் இரு மகன்களுடன் பிள்ளையார் பெரியவன்தட்டிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று செல்வமுருகன் உயிரிழந்து ஒராண்டு ஆன நிலையில், நினைவுநாள் விசேசத்திற்கு செல்வமுருகனின் உறவினர்கள் யாரையும் அருணா அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், நேற்று மாலை செல்வமுருகனின் அக்கா ராசம்மாள், அவரின் மகன் முத்துகுமார் ஆகியோர் செல்வமுருகனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அருணாவிடம், சாமி கும்பிட எங்களுக்கு ஏன் சொல்லவில்லை, முதல் ஆண்டு நினைவு நாள் விசேசம் எல்லாருக்கும் சொல்லித்தானே செய்ய வேண்டும் என்று கேட்ட போது, அதற்கு அருணா சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.
இதனால் முத்துகுமார், அத்தையிடம் தனியாகப் பேச வேண்டும் எனச் சொல்லி, வீட்டில் இருந்தவர்களை சிறிது வெளியே நிறக சொல்லவிட்டு, எங்க மாமாவோட சாவுக்கு நீதான் காரணம் எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த முத்துக்குமார், ஒரு கட்டத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருணாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் தன் உயிரைக் காப்பாற்றி கொள்ள அருணா பாத்ரூமிற்குள் ஓடிய போது, அங்கிருந்த அரிவாளை எடுத்து, அருணாவின் கழுத்தை வெட்டியுள்ளார்.
இதில் அருணா சம்பவ இடத்திலே துடி துடித்து உயிரிழந்தார். அருணாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், அவர் அங்கிருந்து ஓடியுள்ளார்.
அருணாவின் நடவடிக்கைகள் சரியாக இல்லாததால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால்தான் அவர், கடந்த ஆண்டு விஷம் குடித்து உயிரிழந்தார் என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.
மேலும், செல்வமுருகனின் உயிரிழப்பிற்குப் பிறகும் அருணா தனது போக்கினை மாற்றிக் கொள்ளவில்லை என்பதால் உறவினர்கள் தொடர்ந்து அருணாவை கண்டித்து வந்துள்ளனர்.
ஆனால், அவர் கேட்கவில்லை. அருணாவின் உடலில் 21 இடங்களில் கத்துக்குத்து உள்ளது. கொலை செய்யப்பட்ட முத்துக்குமரை தேடி வருவதாகவும், விசாரணைக்கு பின்னரே முழு தகவல் தெரியவரும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.