வாடகை வீட்டில் தனியாக வசித்த 23 வயது நர்ஸ்! அவரை காண சென்ற தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி... அம்பலமான வீட்டு உரிமையாளரின் சுயரூபம்
இந்தியாவில் 23 வயதான இளம்பெண், தனியாக வாடகைக்கு குடியிருந்த வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் தந்தை, மகன் உள்ளிட்ட மூவர் மீது பொலிசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் இந்திரா நகரை சேர்ந்தவர் ஓம்பால் சிங். இவர் மகள் ரேணு பாரதி (23) அதே மாநிலத்தில் உள்ள வைஷாலி நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இதையடுத்து அங்கேயே ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்த நிலையில் மர்மமான முறையில் ரேணு வீட்டில் இறந்துகிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக வீட்டின் உரிமையாளர் ஆனந்தபிரகாஷ் மற்றும் அவர் மகன் ஷுபம் (35) ஆகியோர் ஓம்பால் சிங்கிடம் கூறினர்.
ஆனால் தனது மகளை அவர்கள் கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடுவதாக ஓம்பால் சிங் பொலிசில் புகார் அளித்தார். ஆனால் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் பொலிசார் காலம் தாழ்த்தியதால் அவர் நீதிமன்றத்தை நாடினார்.
அந்த மனுவில், என் மகள் ரேணு தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவர் வசித்த வீட்டின் உரிமையாளரின் மகன் ஷுபம் கட்டாயப்படுத்தி வந்தார். ஆனால் அதிக வயது வித்தியாசம் உள்ளிட்ட சில விடயங்களால் ரேணுவுக்கு அதில் விருப்பமில்லாமல் இருந்தது.
இதையடுத்தே ஷுபம், அவர் நண்பர் மகர் மற்றும் தந்தை ஆனந்த்பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து ரேணுவை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகம் ஆடுகிறார்கள். எனக்கு போன் செய்த ஆனந்த்பிரகாஷ், உங்கள் மகளுக்கு உடல்நலம் சரியில்லை உடனே வாருங்கள் என கூறினார்.
நான் பதறியபடி அங்கு சென்று பார்த்த போது ரேணு தரையில் சடலமாக கிடப்பதை கண்டு துடித்து போனேன். ரேணு தூக்கிட்டு தற்கொலை செய்ததாகவும், சடலத்தை தாங்கள் கீழே இறக்கியதாகவும் அவர்கள் மூவரும் கூறினர், ஆனால் நிச்சயம் என் மகள் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நீதிமன்றம் உடனடியாக இவ்வழக்கை பொலிஸ் கொலை வழக்காக விசாரிக்க வேண்டும் உத்தரவிட்டது.
உத்தரவையடுத்து பொலிசார் மூவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.