தடுப்பூசி கட்டிகளால் இவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்! ஆதாரத்துடன் பிரித்தானியாவின் MHRA வெளியிட்ட முக்கிய தகவல்
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் ஏற்படும் அரிய இரத்த உறைவு பிரச்சினையால் குறிப்பாக இளைய வயதினர் பாதிக்கப்படுகின்றனர் என்று இங்கிலாந்தின் மருந்துகள் கட்டுப்பாட்டாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை முதன்முறையாக மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) வெளியிட்டுள்ள புதிய தரவில், வயதின் அடிப்படையில் தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது.
அரிதான இரத்தக் கட்டிகளால் பாதிக்கப்பட்டுவர்களில் கால் பகுதியினர் 40 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு 60 வயதிற்குட்பட்டவர்கள் என MHRA தரவு காட்டுகிறது.
ஏப்ரல் 21 வரை ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையுடன் கூடிய ரத்த உறைவுகளில் 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 41 உயிரிழந்ததாகவும் MHRA தெரிவித்துள்ளது.
சமீபத்திய NHS தரவு படி, ஏப்ரல் 25 ஆம் திகதிக்குள் 45 வயதிற்குட்பட்ட 5.5 மில்லியன் பேர், 45 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 22.6 மில்லியன் பேர் முதல் டோஸைப் பெற்றதாக காட்டுகிறது.