ஜேர்மனியில் ஹொட்டலில் தங்கியிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஜேர்மனியில், தன் தாயுடன் ஹொட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த பதின்மவயதுப்பெண் ஒருவர், ஆறாவது தளத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
ஹொட்டலில் தங்கியிருந்த பதின்மவயதுப்பெண்
ஜேர்மனியின் Düsseldorf நகரில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் தன் தாயுடன் தங்கியிருந்த பதின்மவயதுப்பெண் ஒருவர், நேற்று, ஹொட்டலின் ஆறாவது தளத்திலிருந்த அறை ஒன்றின் ஜன்னலிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அங்கு விரைந்த பொலிசார் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவள் உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Image: Maximilian Koch/picture alliance
இந்த சம்பவம் ஒரு விபத்து என்று கூறியுள்ள பொலிசார், அது தற்கொலையோ அல்லது சந்தேகத்துக்குரிய மரணமோ இல்லை என தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் நடந்தபோது அந்த பதின்மவயதுப்பெண்ணின் தாய் வெளியே சென்றிருந்திருக்கிறார். இந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |