இலங்கை தமிழரான கணவரை அச்சுறுத்த தீக்குளிப்பது போல நடித்த 28 வயதான மனைவி உயிரிழப்பு... நொடிபொழுதில் விபரீதம்
தமிழகத்தில் கணவரை அச்சுறுத்த தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர்கள் முகாமைச் சேந்தவர் சசிகரன். இவரது மனைவி மஞ்சுளா (28). இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், கடந்த 5-ம் திகதி மாலை கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த மஞ்சுளா, தனது கணவனை அச்சுறுத்த வீட்டில் இருந்து மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு மிரட்டல் விடுத்ததோடு, தீக்குச்சியை பற்ற வைத்து தீக்குளிப்பது போல நடித்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக தீக்குச்சி பற்றி உடலில் தீப்பற்றியது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மஞ்சுளா உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.