சும்மா தான் கழற்றி வைக்கிறேன்! வீட்டை விட்டு வெளியில் சென்ற கணவனை இழந்த 26 வயது பெண்... அவரை தேடி சென்ற தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் திருமணமான இளம்பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (31). இவருக்கும் இவருக்கும் செல்விக்கும் (26) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு அனுஷ்கா (5) மாதேஷ் (2). என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சங்கரநாராயணன் தீப்பெட்டி ஆலையில் வேலைபார்த்து வந்தார். குடும்பத்தில் அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சங்கரநாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின்பு செல்வி அதே கிராமத்தில் தனது தாயார் வீரலட்சுமியின் (60) வீட்டின் அருகே வேறு ஒரு வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தார்.
கணவர் தற்கொலைக்கு பின்னர், செல்வி மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை செல்வி தனது நகைகளை எல்லாம் கழற்றி வீட்டில் உள்ள அலமாரியில் வைத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அவருடைய தாய் வீரலட்சுமி எதற்காக நகையை எல்லாம் கழற்றுகிறாய்? என கேட்டுள்ளார்.
அதற்கு செல்வி, சும்மா தான் கழற்றி வைக்கிறேன் என கூறி இருக்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஊரை அடுத்த காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றார்.
பின்னர் மனதை கல்லாக்கிக் கொண்டு, பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் மகனையும், மகளையும் கிணற்றில் தூக்கி வீசியுள்ளார். கிணற்றில் குழந்தைகள் தத்தளித்ததும், செல்வியும் குதித்தார்.
பின்னர் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே தனது மகளும், பேரக்குழந்தைகளும் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் வீரலட்சுமி அருகில் உள்ள இடங்களில் எல்லாம் தேடி உள்ளார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செல்வி, தனது குழந்தைகளுடன் காட்டுப்பகுதியை நோக்கி சென்றதாக தெரிவித்தனர்.
பின்னர் வீரலட்சுமி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று தேடிப்பார்த்த போது, கிணற்றில் செல்வியும், குழந்தை அனுஷ்காவும் பிணமாக மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டனர்.
கணவர் இறந்த துக்கத்தில் இந்த முடிவை செல்வி எடுத்தது தெரியவந்த நிலையில் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது