குவைத்தில் உள்ள தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி: இளம் பெண் யூடியூபர் எடுத்த விபரீத முடிவு
ஹைதராபாத்தில் இளம்பெண் யூடியூபர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண் யூடியூபர் உயிரிழப்பு
21 வயது கல்லூரி மாணவியும், யூடியூபருமான போனு கோமளி(bonu komali), அவர் ஹைதராபாத்தில் வசித்து வந்த வாடகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கோமளி, ஹைதராபாத்தில் தங்கி தன்னுடைய தனியார் கல்லூரி ஒன்றில் BSc பயின்று வந்தார். அத்துடன் யூடியூப் வாழ்க்கை முறை சார்ந்த வீடியோக்களையும் பதிவிட்டு வந்துள்ளார்.

தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி
கடந்த 11 மாத காலமாக தனியாக வசித்து வரும் போனு கோமளி கடந்த திங்கட்கிழமை அதிகாலை குவைத்தில் பணிபுரிந்து வரும் அவரது தாய் சத்ய வரலட்சுமிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் “I Love you Mummy, தம்பியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் அவரது மொபைலும் இதன் பிறகு அணைக்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த தாய், ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய நண்பருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக போய் பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை 3 மணியளவில் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது போனு கோமளி சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உயிரிழப்புக்கான காரணம்
போனு கோமளி உயிரிழப்புக்கு அவரது நீண்ட கால காதலில் ஏற்பட்ட முறிவு மற்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பே ஒரு முறை உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், இந்த சம்பவம் குறித்து தற்போது சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNELல் இணையுங்கள் |