செல்போன் திருட்டில் சாட்சி சொன்ன இளைஞர்.. 60 முறை கொடூரமாக குத்திக் கொல்லப்பட்ட கொடூரம்
செல்போன் திருட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
60க்கும் அதிகமான முறை கத்தியால் குத்தப்பட்ட மணீஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்
இந்திய தலைநகர் டெல்லி அருகே இளைஞர் ஒருவர் 60 முறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் வடகிழக்கே சுந்தர் நகர் பகுதியில் இளைஞர் ஒருவர், மூன்று பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மணீஷ் என்ற இளைஞரிடம் இருந்து முஹ்சின், காசிம் என்ற இருவர் செல்போனை திருடிச் சென்றுள்ளனர். அப்போது மணீஷின் கழுத்து, வயிற்று பகுதிகளில் கத்திக்குத்து விழுந்துள்ளது.
இதுகுறித்து மணீஷ் பொலிஸிடம் புகார் அளித்ததன் பேரில் முஹ்சின் மற்றும் காசிம் இருவரும் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மணீஷின் வீட்டிற்கே சென்ற முஹ்சின், காசிம் ஆகியோரது கூட்டாளிகள், வழக்கை வாபஸ் பெறுமாறு மணீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர்.
ஆனால், நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த மணீஷ் குறித்த இருவர் பற்றியும், அவர்களது கூட்டாளிகள் மிரட்டல் விடுத்தது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். அதன் பின்னர் பலர் முன்னிலையில் மணீஷ் ஒரு கும்பலால் கொடூரமாக குத்தி கொல்லப்பட்டார்.
பிலால், ஆலம், பைஜான் என்ற அந்த கும்பல் 60 முறை கத்தியால் மணீஷ் குத்திக் கொன்றதுடன், இன்னும் இருவரை கொல்வோம் என வீதியில் கூறி சபதம் எடுத்துள்ளனர்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மணீஷின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் மூவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.