என்னை எதாவது செய்துவிடுவார் என பயந்தேன்! அதனால் தான் புகைப்படத்தை அனுப்பினேன்... இளைஞனை அம்பலப்படுத்திய 12 வயது சிறுமி
அமெரிக்காவில் 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்து அவரை அச்சத்தில் வைத்திருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுன் கவுண்டியை சேர்ந்தவர் பிராடி அகிமா (19). இவர் மீது 12 வயது சிறுமி அதிர்ச்சி புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து சில முறை என்னை அகிமா வன்கொடுமை செய்தார்.
மேலும் இதை வெளியில் யாரிடமும் சொல்லாதே! ஏனென்றால் எனக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுவிடும் என என்னிடம் கூறினார்.
இதோடு மோசமான மற்றும் ஆபாச புகைப்படத்தை எனக்கு அனுப்பிய அகிமா என்னையும் அது போன்ற புகைப்படத்தை அனுப்புமாறு வற்புறுத்தினார்.
நான் அவர் மீது உள்ள அச்சத்தால் புகைப்படத்தை அனுப்பினேன், ஏனெனில் என்னை எதாவது செய்துவிடுவார் என பயந்தேன் என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அகிமாவை கைது செய்த பொலிசார் அவர் செல்போனை சோதனை செய்த போது நிறைய ஆபாச தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தது.
இதனிடையில் அகிமா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் 200 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.