புலிக் கூண்டுக்குள் விழுந்த இளைஞர்: இரத்தத்தை உறைய வைக்கும் திகில் காட்சிகள்
இந்தியாவில் வன விலங்குகள் பூங்கா ஒன்றில் புலி இருக்கும் கூண்டுக்குள் விழுந்த நபரை புலி கடித்துக் குதறும் திகில் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் டில்லியில் அமைந்துள்ள வன விலங்குகள் பூங்கா ஒன்றிற்குச் சென்ற Maqsood (20) என்ற இளைஞர், புலி அடைத்துவைக்கப்பட்டுள்ள இடத்திற்குள் இறங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், சிலர் அவர் தவறி விழுந்ததாக தெரிவித்துள்ளார்கள்.
பூனையிடம் எலி சிக்கிக்கொண்டால், அதைக் கொல்வதற்கு முன் பூனை தன் இரையுடன் கொஞ்ச நேரம் விளையாடும். அதேபோல் இந்த புலி கொஞ்ச நேரம் அந்த இளைஞரை வைத்து விளையாட்டுக் காட்டியதாம். பிறகு, அவரை கழுத்தைக் கடித்து இழுத்துச் சென்றுள்ளது அந்த புலி.
ஆனால், அங்கு பாதுகாவலர்கள் யாருமில்லை என்று கூறும் பார்வையாளர்கள், அவர்கள் நினைத்திருந்தால் மயக்க ஊசி செலுத்தி, அந்த புலியை சுட்டு அந்த இளைஞரைக் காப்பாற்றியிருக்கலாம் என்கிறார்கள்.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகே அந்த புலியை அங்கிருந்து அகற்றி அந்த இளைஞரின் உடலை மீட்க முடிந்திருக்கிறது.
வீடியோவை காண - https://www.thesun.co.uk/news/16292155/horror-man-mauled-death-tiger-climbing-zoo-enclosure/