ஏதாவது ஒரு ஏரியில் மிதப்பேன்! காதலியை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமண திட்டம்..இளைஞர் சடலமாக மீட்பு
சென்னையில் திருமணத்திற்கு முன்பாக இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காதலியிடம் 68 லட்சம் சுருட்டல்
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த் (29). இவருக்கும் தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் இளம்பெண்ணொருவர் நிஷாந்த் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், தன் வீட்டை விற்று கிடைத்த பணம் ரூ.68 லட்சத்தை வங்கிக் கொண்டதாகவும் பொலிஸில் புகார் அளித்தார்.
இதனை அறிந்த தொழிலதிபர் தன் மகளின் திருமணத்தை நிறுத்திவிட்டார். இதற்கிடையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், நிஷாந்த் தலைமைறைவாகி விட்டார்.
ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உடல்
அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சேர்ந்து நிஷாந்த் மது அருந்தியுள்ளார்.
பின்னர் அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.