லண்டனில் சாலையில் கிடந்த சடலம்! இந்திய இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு... அதிரவைக்கும் கொலையின் பின்னணி
லண்டனில் நண்பரை கொலை செய்த இந்திய இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த பல்ஜித் சிங் (37) என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி தனது நண்பரான மன்பிரீத் சிங் (21) என்பவரால் கழுத்தை நெரித்து சாலையில் கொலை செய்யப்பட்டார்.
மன்பிரீத் மாணவர் விசாவில் இந்தியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு வந்த நிலையில் பல்ஜித்துடன் நட்பானார்.
இருவரும் ஒரே இடத்தில் தங்கிய நிலையில் ஒரு சமயத்தில் குடிபோதையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் மன்பிரீத்தை பல்ஜித் தன் இடத்தில் இருந்து வெளியேற்றினார்.
பின்னர் கடந்தாண்டு ஏப்ரல் 25ஆம் திகதி லண்டனின் ஹயீஸ் இரயில் நிலையம் அருகில் உள்ள சாலையில் பல்ஜித்தும், மன்பிரீத்தும் சந்தித்து கொண்டனர்.
அப்போது மன்பிரீத்தின் நண்பர் ஜஸ்பிரீத்துடன் உடன் இருந்தார். அந்த சமயத்தில் மன்பிரீத் மற்றும் பல்ஜித் ஆகிய இருவரும் மது போதையில் இருந்த போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.
அப்போது பல்ஜித் கழுத்தை மன்பிரீத் இறுக்க தொடங்கினார். அதை ஜஸ்பிரீத் தடுக்க முயன்றும் அவரால் முடியவில்லை.
பின்னர் பல்ஜித்தை கழுத்தை நெரித்து மன்பிரீத் கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.
அவர்களின் நடமாட்டம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவானது. இதையடுத்து பொலிசார் மன்பிரீத்தை கைது செய்தனர்.
ஏற்கனவே பல்ஜித் சடலத்தை பொலிசார் கைப்பற்றினர். அவரின் கழுத்து மற்றும் விலா எலும்புகளின் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
அவர் மீதான வழக்கு இசில்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் மன்பிரீத் மீதான குற்றம் நிரூபணமான நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.