தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை மணக்க முயன்ற இளைஞர்! ஆத்திரத்தால் வந்த வினை
தன்னை விட ஆறு வயது மூத்த பெண்ணை மணக்க தயாரான இளைஞர்.
குடும்பத்தார் தடுத்ததால் ஆத்திரத்தில் மேற்கொண்ட செயல்.
தமிழகத்தில் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை மணக்க நினைத்த இளைஞர் ஆத்திரத்தில் செய்த செயலால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கத்தைச் சேர்ந்த மாரிமுத்து (19) என்பவர் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை காதலித்து வந்தார். 10 நாட்களுக்கு முன், இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முயன்றபோது, மாரிமுத்துவின் பெற்றோர் வயதை காரணம் காட்டி அவர்களை பிரித்தனர்.
அதன்பின்னர் மாரிமுத்துவை கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 4ம் திகதி இரவு 8 மணிஅளவில் குடிபோதையில் பெற்றோர் வீட்டிற்கு வந்தார் மாரிமுத்து.
herzindagi
அப்போது மது பாட்டிலை உடைத்து தந்தை கந்தசாமி, தாயார் முத்துலட்சுமி (39) மற்றும் சகோதரர் சந்தோஷ் (16) ஆகியோரை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் மாரிமுத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்பின்னர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.